search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velli Thiruppur Palingeeshwarar Temple"

    • வீண் சண்டை, சச்சரவுகள் நேராமல்,பஞ்சமும், நோயும் அண்டாமல் ஊரைக் காப்பவர் இவர்
    • கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.

    வாஸ்து பிரச்சினைகளை தீர்க்கும் வெள்ளித் திருப்பூர் பளிங்கீஸ்வரர்

    வெள்ளித் திருப்பூர் ஸ்ரீபளிங்கீஸ்வரரர் கோவில் சுமார் ஆயிரத்து இரு நூறு ஆண்டுபழமை மிக்கது.

    பளிங்கீஸ்வரரின் கோவிலுக்கு செல்லும் வழியில் முனியப்பன் சன்னதி மிகக் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றது.

    வீண் சண்டை, சச்சரவுகள் நேராமல்,பஞ்சமும், நோயும் அண்டாமல் ஊரைக் காப்பவர் இவர் என்கிறார்கள்.

    பளிங்கீஸ்வரர் கோவிலுக்கோ, செல்லியாண்டியம்மன் ஆலயத்திற்கோ செல்வதற்கு முன், முத்து முனியப்பரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பது தொன்று தொட்டு வழக்கமாக உள்ளது.

    பளிங்கீஸ்வரரின் சுற்றுப்பிரகாரம் மிகப் பெரியது பிராகார வெளிச்சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    கி.பி. 1265 ல் "கூனப்ப பாண்டியன்" என்ற மன்னன் இந்த கோவிலை மேம்படுத்தியதை விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர், லட்சுமி, குபேரர் மூலம் அறிய முடிகிறது.

    அலங்காரம் பளிங்கீஸ்வரர் கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.

    பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து வந்து இறைவன் இறைவியை வணங்கிவிட்டு இந்தத் திருக்கோவிலிலேயே நிச்சயத்தை நடத்துகின்றனர்.

    வாஸ்து தோஷம் காரணமாக இல்லத்தில் ஏற்படும் பிரச்சினைகள், திருமணத் தடைகள் விலகவும் பளிங்கீஸ்வரரின் சன்னதியில் அர்ச்சனை செய்து பிரார்த்திக்கிறார்கள்.

    ×