search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velappanayakanvalasu panchayat"

    • 11 பணிகள் 34.99கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 6 பணிகள் ரூ.15.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சியில் நபார்டு மற்றும் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் தார்சாலை தரம் உயர்த்துதல் பணியி னை செய்தித்துறை அமை ச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத் தலைமை யில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் தற்போது 11 பணிகள் 34.99கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 6 பணிகள் ரூ.15.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்ப ட்டுள்ளது.வெள்ளகோவில் ஊராட்சிஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி,இலுப்பை கிணற்றில் நபார்டு மற்றும் சாலை மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் ரூ.1.62கோடி மதிப்பீட்டில் என்.ஜி.எம்., சாலை முதல் இலு ப்பைகிணறுவரை தார்சாலைதரம் உயர்த்துதல் பணி தொடங்கி வைக்கப்ப ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×