search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle Drivers stutter"

    • கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது.
    • சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம், பங்களாபுதூர் சாலையில் கழிவுநீர் செல்ல புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, குளம் போல் காட்சியளித்தது.

    மேலும் கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கழிவுநீர் ஆடைகளின் மேல் பட்டு அசுத்தத்தை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசி வருகிறது. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதியில் சாலை அரிப்புகள் ஏற்பட்டு, சாலை சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பல மாதங்களாக சரி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×