search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetables stagnant"

    கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ஒட்டன்சத்திரம் சந்தையில் ரூ.4 கோடி அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன. #Vegetables

    ஒட்டன்சத்திரம்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் நாளை பல்வேறு தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினசரி 100-க்கும மேற்பட்ட லாரிகளில் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து மட்டும் 50 முதல் 60 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு மட்டுமே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்றே விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கேரளாவுக்கு அனுப்ப உள்ள காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நேற்று முதலே காய்கறிகளை கொண்டு வராததாலும், லாரிகளும் வராததாலும் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    வெளியூர்களுக்கு அனுப்ப காய்கறிகள் தயாராக இருந்த போதும் தொழிலாளர்கள் வரவில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது. #Vegetables

    கேரளாவில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளான அத்திக்கோம்பை, மார்க்கம் பட்டி, அம்பிளிக்கை, தாராபுரம், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து கோவை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

    குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. பாலக்காடு, செம்பல்சேரி, வடக்கஞ்சேரி, பெரியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் காய்கறி விற்பனை அதிகமாக இருக்கும். விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக அய்யப்ப பக்தர்களிடம் கேரள அரசு கெடுபிடியாக நடந்து கொள்வதை கண்டித்து திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது வேணு கோபாலன் நாயர் என்பவர் திடீரென உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியினர் இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் ஆர்டர் செய்த காய்கறிகளை வியாபாரிகள் வாங்க வரவில்லை. இதனால் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

    தமிழக பகுதிக்கு மட்டும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும் அளவு காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மேலும் விலையும் குறைவாகவே கேட்கப்பட்டது. சின்ன வெங்காயம் ரூ.5 முதல் ரூ.12 வரை விலை கேட்கப்பட்டது. பூசணிக்காய் ரூ.1 என்ற விலையில் விற்பனையானது.

    ×