search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam accident"

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி வந்த வாலிபர் மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் சிவதாஸ் (வயது22). இவர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி அண்டர்காட்டில் இருந்து வேதாரண்யத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது அந்த வழியாக ஞானவிக்னேஷ், விஜயராகவன் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவதாஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானவிக்னேசும், விஜய ராகவனும், காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சிவதாஸ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவதாசின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×