search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vanginathan"

    • நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • வாஞ்சிநாதன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரின் உருவப் படத்திற்கு நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முகைதீன் கனி, முருகன், தலைமை ஆசிரியர் மணிமாறன், ம.தி.மு.க. நகர செயலாளர் முருகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×