search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandavasi murder"

    வந்தவாசி அருகே நிலம் சம்பந்தமான முன்விரோதத்தில் அண்ணனை தம்பியை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த அறுவடை தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 51) விவசாயி.

    இவரது சகோதரரர் தாமோதரன் (48) இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் அருகில் உள்ள எஸ்.நாவல்பக்கம் ஏரிக்கரை அருகே உள்ளது.

    இதில் நிலத்துக்கு செல்வது சம்பந்தமாக பாலாஜிக்கும் தாமோதரனுக்கு முன்விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    கடந்த மாதம் இரு தரப்பினரும் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு பாலாஜி அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு தனது விவசாய நிலத்தில் பூஜை செய்ததாக தெரிகிறது.

    அங்கு சென்ற தாமோதரன் நிலத்தில் மாந்திரீக பூஜை செய்து விவசாயம் செய்ய முடியாமல் இருக்க செய்வதாக கருதி தனது அண்ணனிடம் தகராறு செய்தார். தாமோதரனுக்கு ஆதரவாக அவரது மனைவி சாந்தா (43) மகன் அமர்நாத் (25) ஆகியோர் ஒன்று சேர்த்து தட்டிக் கேட்டனர்.

    அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமோதரன் சரமாரியாக கத்தியால் பாலாஜி தலை உடல் பகுதிகளில் வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரன் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
    ×