என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vaima Vidyalaya"
- வைமா வித்யாலயாவில் இளம்படை தொடக்கவிழா நடந்தது.
- அருணா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வைமா வித்யாலயாவில் தனியார் தொலைக்காட்சியின் இளம்படை தொடக்கவிழா நடந்தது. வைமா கல்வி நிறுவனங்களின் மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார்.
வைமா கல்வி நிறுவனங்களின் திருப்பதி செல்வன் முன்னிலை வகித்தார். ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலாளர் பார்த்தசாரதி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். 27-வது வார்டு கவுன்சிலர் சுமதி ராமமூர்த்தி, 37-வதுவார்டு கவுன்சிலர் கார்த்திக், லட்சுமி மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த சித்ரவேல் அறிமுக உரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம் படை கேப்டன் ஹாசினி ஏற்புரை வழங்கினார்.வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி நன்றி கூறினார்.
- யோகா போட்டியில் வைமா வித்யாலயா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
- 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
ராஜபாளையம்
மாநில அளவிலான யோகாசனப்போட்டி சாத்தூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து 458 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியில் இருந்து 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
கிருஷ்ணசாமி கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி, பேராசிரியர் கண்ணன் சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி சேர்மன் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு யோகா செய்து காட்டிய மாணவர்களைப் பாராட்டி வைமா வித்யாலயாவிற்கு "சாம்பியன் ஆப் சாம்பியன்" பட்டத்தை வழங்கினர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணாதேவி மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் கேடயமும், பரிசும் பெற்ற மாணவர்களைப் பாரா ட்டினர்.
மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த யோகக் கலை பயிற்றுநர் இசக்கி முத்து மற்றும் ஆசிரியைகள் முத்துமாரி, ராமராதா, ராஜலட்சுமி, கீதாஞ்சலி, முத்துமணி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
