என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » us citizens
நீங்கள் தேடியது "US citizens"
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. #USTravelAdvisory #USPakAdvisory
வாஷிங்டன்:
பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.
“பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர். கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன.
பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது. #USTravelAdvisory #USPakAdvisory
பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3வது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மிகவும் அபாயகரமான 4-வது நிலையில் வைத்துள்ளது.
“பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர். கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன.
பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது. #USTravelAdvisory #USPakAdvisory
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மாமனார், மாமியாருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Trump #USCitizens
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா. இவரது பெற்றோர் விக்டர்-அமலிஜா னவ்ஸ் ஆகியோர் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள்.
அவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். 70 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது அமெரிக்க குடிமக்கள் ஆகி விட்டனர். நியூயார்க்கில் அதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அவர்களுக்கு மருமகனும், அதிபருமான டிரம்ப் தனது அதிகாரத்தின் மூலம் வழங்கினார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் அவர் தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. #Trump #USCitizens
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா. இவரது பெற்றோர் விக்டர்-அமலிஜா னவ்ஸ் ஆகியோர் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள்.
அவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். 70 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது அமெரிக்க குடிமக்கள் ஆகி விட்டனர். நியூயார்க்கில் அதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அமெரிக்க குடியுரிமை பெற அதற்கு விண்ணப்பிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே ‘கிரீன் கார்டு’ (பச்சை அட்டை) பெற வேண்டும். ஆனால் மெலானியாவின் பெற்றோர் சமீபத்தில் தான் கிரீன் கார்டு பெற்றனர்.
அவர்களுக்கு மருமகனும், அதிபருமான டிரம்ப் தனது அதிகாரத்தின் மூலம் வழங்கினார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் அவர் தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. #Trump #USCitizens
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X