search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unity trip"

    • பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
    • ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் குறித்த விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான எஸ்.ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் செல்வன், இலக்கிய அணி தலைவர் பொன்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் குமார்பாண்டியன் வரவேற்றார்.

    மாவட்டத்தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் குறித்த விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் கிழக்கு வட்டார தலைவர் தங்கரத்தினம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா,

    கீழப்பாவூர் நகர தலைவர் சிங்ககுட்டி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் பூபால்பாண்டியன், சீனிவாசகம், ராமர், வக்கீல் உமாபதி, நேசமணி, மாதவன், தங்கபழம், செல்வன், தாமோதரன், சின்னராஜா, சிவன்பாண்டியன், மாரியப்பன், சத்தியமூர்த்தி, அமர்நாத், தவசிமுத்து தங்கராஜ், தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறும்பலாப்பேரி கிராம கமிட்டி தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

    ×