என் மலர்
நீங்கள் தேடியது "Undial"
- பாரதிபுரத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி விவேகானந்தர் என்பவர் உண்டியலுடன் சென்றது தெரியவந்தது.
- இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை தேடி வருகிறார்கள்.
சூலூர்,
சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சபாபதி கோவில் கதவுகளை பூட்டிவிட்டு சென்றார். அதன்பிறகு மறுநாள் காலை வந்து பார்த்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சபாபதி, பதறியடித்துகொண்டு கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த உண்டியல் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது. எனவே ஊர்மக்கள் ஒருசிலரிடம் விசாரித்தனர்.
இதில் பாரதிபுரத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி விவேகானந்தர் என்பவர் உண்டியலுடன் சென்றது தெரியவந்தது. எனவே கோவில் கமிட்டியினர் அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் தரப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரித்தபோது, விவேகானந்தர் வீட்டின் அருகே ரோட்டோரம் திருட்டு போன உண்டியல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விவேகானந்தனை தேடி வருகிறார்கள்.






