search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Try to put out the fire"

    • கந்து வட்டி கொடுமையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
    • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த மண்எண்ணையை எடுக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ராயப்பன் (வயது 47) என்பதும் அவரது மனைவி வேளாங்கண்ணி (37), இவர்களது மகள் ஆரோக்கிய ஷாலினி (வயது 22) என்பதும், ஆரோக்கிய ஷாலினியின் கல்லூரி படிப்புக்காக ராயப்பன், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிரவனிடம் கடந்த 2018 -ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

    பின்னர் கடந்த ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த சென்ற போது, கதிரவன் தனக்கு வட்டியுடன் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையெனில் பூர்வீக சொத்தை தனது பெயரில் கிரையம் செய்து கொடுக்கும்படி மிரட்டி வருகிறார். இது தொடர்பாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மண்எண்ணை கேனுடன் வந்ததாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் இது தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு தம்பதியினர் மண்எண்ணை கேனுடன் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • வீட்டின் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் அன்னகெளந்தன் பெரியஏரி உள்ளது. இதில் 10 குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதில் மூன்று குடும்பத்தினர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். இதில் சிலர் அகற்றாமல் இருந்து வந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கூரை வீட்டில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சண்முகம் (வயது 53), என்பவரது வீட்டின் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை கேனை மிகவும் கவனமாக பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பை தடுத்தனர்.

    பின்னர் அவரை சமாதானப்படுத்திய போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், கருணாநிதி ஆகியோர் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றினர். மேலும் அங்கு குடியிருந்தவர்களில் சிலர் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோவில்நிலத்தை குத்தகை எடுத்தது தொடர்பாக வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சிறுகளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்.இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்தார்.
     அப்போது அவர்களிடம் மண் எண்ணெய் இருந்ததை கண்டறிந்த போலீசார் பறிக்க முயல்வதற்குள் சண்முகத்தின் மகன் தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். 

    அப்போது கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் சண்முகத்தின் அதே ஊரை சேர்ந்த சிலர் விவசாயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் என்றும் இதனால் ஊருக்குள் செல்லவும்,பொருட்கள் வாங்கவும் முடியவில்லை.

    போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து இது தொடர்பான புகார் மனுவை எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்து விட்டு திரும்பினர்.
    ×