search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tripura Samharam"

    • முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.
    • திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும்.

    ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு புராண நிகழ்வு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், அந்த புராண சம்பவம் மீண்டும் ஒரு தடவை நிகழ்த்தி காட்டப்படும். அந்த வகையில் திருவதிகை தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ நாளில் சிவபெருமான், திரிபுரத்தை எரித்ததை நடத்துகிறார்கள்.

    இந்த ஆண்டு முப்புரம் எரித்து, சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அதி காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். பிறகு திரிபுர சம்ஹாரமூர்த்திக்கான திருத்தேர் புறப்படும். ஏராளமானவர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.

    அன்றிரவு 7 மணிக்கு திரிபுர சம்ஹாரமூர்த்தியை அலங்கரித்து தேரில் எழுந்தருள செய்வார்கள். இதற்கிடையே மேளவாத்தியம் முழுங்க வாணவேடிக்கையோடு சரநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சரம்கொண்டு வரப்படும்.

    அந்த சரத்தை பெற்று சிவபெருமான் புன்னகை செய்வார். முப்புரம் அழியும். இதை மக்களுக்காக நேரில் காட்ட 3 அரசுர்கள் போன்று 3 பொம்மைகள் செய்யப்படும்.

    அந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திரிபுரசம்ஹார மூர்த்தி கையில் இருந்து செல்லும் அம்பு தாக்கி அழிக்கும். திருச்செந்தூர் தலத்தில் சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் போது புகை விட்டபடி பட்டாசு விடப்படும். அது போன்ற இத்தலத்திலும் சம்ஹார மூர்த்தியிடம் இருந்து பட்டாசு சென்று மூன்று அசுரர்களையும் அழிக்கும்.

    இந்த முப்புரமெரித்த காட்சியைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவதிகையில் திரள்வார்கள். முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.

    அது மட்டுமல்ல இந்த பிறவியில் எந்த எதிரிகளாலும் நமக்கு துன்பம் வராதாம். அசுரன் எனும் எதிரியை சிவபெருமான் அழிப்பதால், முப்புரமெரித்த காட்சியைக் கண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும். திருவதிகை தலத்தில் திருநாவுக்கரசருக்கான பூஜை மிக,மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் சதயம் நட்சத்திரம் தினத்தன்று திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. மேலும் இத்தலத்தில் திருநாவுக்கரசர் நீண்ட நாட்கள் வாழ்ந்ததால், அவரது வரலாற்றை நினைவு கூறும் வகையில் சித்திரை மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

    ஒவ்வொரு நாளும் திருநாவுக்கரசரின் வரலாற்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இந்த 10 நாட்களும் திருநாவுக்கரசரை வழிபட்டால் பெரும் பேறுகள் கிடைக்கும்.

    இத்தலத்தில் தான் தெப்ப உற்சவத்தின் போது ஈசனுக்கு பதில் சிவனடியாரான திருநாவுக்கரசர் தெப்பத்தில் சென்று வருவார்கள்.தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இந்த அற்புதத்தை காணமுடியாது.

    • திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
    • இக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

    வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.

    இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலக படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

    இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதை கண்டார்.

    தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்தார்.

    திரிபுரவாதிகள் திருவதிகைக்கு தெற்கேயும், ஈசன் திருவதிகையிலும் இருந்து போர் புரிந்தனர். அசுரர்கள் மூவரும் ஈசன் தங்களை அழிக்கும் போது தாங்கள்பெற்ற வரத்தினால் கோட்டைகள் மூன்றும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அழிக்கும் வேலை பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது. மிக முக்கியமாக ஈசனுக்குக் கோபம் இருக்கக் கூடாது போன்ற கட்டுபாடுகளுடன் வரம்பெற்றிருந்தனர்.

    திரிபுரவாதிகளும் ஈசனும் போர் புரியும்போது கொடுத்த வரத்தினால் ஈசன் புன்னகை கொண்டிருந்தார். இதை கண்ணுற்ற அசுரர்கள் ஈசனுக்குக் கோபம் வரவழைக்க ஈசனின் இடபாகம் அமர்ந்த தேவியை தருமாறு கேட்டனர். ஈசன் புன்னகைத்துக் கொண்டே தேவியை நோக்கினார். கேட்டவர்க்கு கேட்டதை கொடுத்து விடும் ஈசன் எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அம்பிகை ஈசனுக்கு வலபுரம் வந்து விட்டார்.

    (இத்திருக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்நிகழ்ச்சி நடந்த இடம் திருவதிகைக்கு மேற்கே வீரப்பெருமாநல்லூர் எனும் ஊர் என்பர்.

    தேவியை கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் `சிரித்தேன் எரித்தேன்' என்று அம்பு தொடுத்தார். தேவர்களின் செருக்கு அடங்க புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.

    அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

    சிவபெருமான் முப்புரவாசிகளில் இருவரை வாயிற்காப்பவனாக (துவாரபாலகர்), நியமித்தார். அவர்களில் ஒருவர் சங்கநாதம் வாசித்துக் கொண்டும், மற்றொருவர் யாழ் வாசித்துக் கொண்டும் இருப்பதை திரிபுரசம்கார மூர்த்தி சன்னதி வாசலில் காணலாம். ஒருவரை குடமுழா முழக்குபவராக தமது அருகில் இருக்கும்படி அருளி மறைந்தார்.

    அசுரர்களின் கோட்டை எரிந்தும் எரியாமலும் வேகாமல் நின்ற பகுதி `வேகாகொள்ளை' என இன்றளவும் கூறப்படுகிறது. இது இச்சரித்திரத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த வேகாகொல்லை என்னும் ஊரில் சூளைகள் வேகாமல் நின்று போவதும் இன்று வரை கண்கூடாக அதிசயமாகக் காண முடிகிறது.

    • மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார்.
    • அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

    கடலூர்:

    இறைவன் தன் பக்தர் களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப் போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாள மாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழும் திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் திரிபுர சம்ஹார ஐதீக திருவிழா நேற்று இரவு நடந்தது. சிவனின் அட்ட வீரட்டத் தலங்களில் சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்ட அதிகை வீரட்டானம் பிரம்மாவை வேண்டி கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்ற தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி இவர்கள் மூவரும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மாவிடம் பெற்றனர்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நகரங்க ளும் அருகேவரும்போது, அழியகூடியது இந்த நகரம் வரங்களைப் பெற்ற மூவ ரும், தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள் சிவ பெருமானை வேண்டினர். மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார். பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும்வித மாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்கு மாறும் ஒரு தேரை உருவாக்க சொன்னார் சிவபெருமான். 

    பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கர ங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால் களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப் பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டை யாகவும் அமைந்தன.பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம்வீச, விந்தியமலை குடையானது. வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்பு நிறுத்தப்பட்ட தேரில் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார். அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    மூன்று அசுரர்களும் சிவ பெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்ப தால்தான், சிவபெருமானால் அசுரர் களை அழிக்க முடிகிறது. நமது சக்தியில் பாதி பலம் இல்லை என்றால் சிவபெரு மானால் சம்ஹாரம் செய்ய முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒருநொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது.

    ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லா மலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர் கள் வெட்கிதலை கவிழ்ந்தனர். சிரித்து எரித்த இந்த ஐதீக நிகழ்வு வைகாசி சுவாதி தினமான நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரநாராயண பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருள செய்துமுப்புரம் எரிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐதீக நிகழ்ச்சியை கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் கோவில் நிர்வாகத்தினர், பண்ருட்டி திருவதிகை நகரவாசிகள், விழாக் குழுவினர், சிவனடியார்கள் சிவ தொண்டர்கள் செய்திருந்தனர்.

    ×