search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Girl Molested"

    • பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார்.
    • சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த சிறுமி அடுத்தடுத்து 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரரைண நடத்தினர்.

    மணப்பாறையை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவருடன் மணப்பாறையில் உள்ள ஒரு லாட்ஜியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார். இரவு வெகு நேரமானதால் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிந்து கொண்ட அவர், சிறுமியை மத்திய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து கோவைக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன் பின் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி மறுநாள் திருச்சி வந்தார். வீட்டுக்கு செல்ல விரும்பாத அச்சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, பேருந்தில் ஏறி மணப்பாறை வந்துள்ளார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சிறுமியிடம் அங்கிருந்த ஒரு நபர் பேச்சுக் கொடுத்துள்ளார்.

    சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் சிறுமிக்கு உடைகள், காலணி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து, சிறுமியை ஒரு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகேசனை போக்சோவில் கைது செய்தனர்.

    மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற மர்மநபர் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை ஆராய்ந்து விசாரணை நடத்தி அவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×