search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train hits"

    • பலியான வாலிபர் இரும்பு வேலி அமைக்கும் பணிக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்று வந்தார்.
    • ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை மேலப்பாளை–யத்தை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 25). இவர் தோட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இரும்பு வேலி அமைத்து கொடுக்கும் பணி செய்து வந்தார்.

    தூத்துக்குடியில் இரும்பு வேலி அமைக்கும் பணிக்காக அங்கு தினமும் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி-மீளவிட்டான் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் காதர் மைதீன் ரெயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் விரைந்து சென்று பலியான காதர்மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் விழுந்து தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×