என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic jam on"

    • சுவஸ்திக் கார்னர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு க்காக குழிகள் தோண்ட ப்பட்டு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் தரைவழி மின்சார இணைப்பு பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் ரோட்டில் இருந்து சத்தி ரோடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.

    ஆனால் அதே சமயம் சக்தி ரோட்டில் இருந்து மேட்டூர் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் அந்த வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    மாறாக அந்த வாகனங்கள் சக்தி ரோட்டில் இருந்து நேராக நாச்சியப்பா வீதி வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் சாலைகள் குறுகலாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சக்தி ரோடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு சக்தி ரோடு மிக முக்கியமான போக்குவரத்து பகுதியாக உள்ளது. ஈரோ ட்டில் இருந்து சித்தோடு, கோபி, கவுந்த ப்பாடி, சத்தியமங்கலம் செல்லும் அனைத்து வாகனமும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.

    இதேப்போல் அங்கிருந்து ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் சக்தி ரோடு வழியாகத்தான் வருகின்றன.

    இதேபோல் தற்போது அனைத்து வாகனங்களும் நாச்சியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதால் நாச்சியப்பா வீதியில் கடந்த 2 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சக்தி ரோடு பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.

    ×