என் மலர்
நீங்கள் தேடியது "towns Names transferred"
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். #MinisterPandiarajan #Ramadoss
சென்னை:
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது?. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதைபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில், என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குழுவினர் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பல நூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’ என்று ஐ.நா. அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterPandiarajan #Ramadoss
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது?. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதைபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில், என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குழுவினர் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பல நூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’ என்று ஐ.நா. அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterPandiarajan #Ramadoss
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #MinisterPandiarajan
சென்னை:
தமிழகத்தில் சில ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெவ்வேறாக குறிப்பிடப்படுகின்றன. இதனை தமிழில் குறிப்பிடுவது போன்றே மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, வெவ்வேறாக குறிப்பிடப்படும் ஊர்களின் பெயர்களை ஒரே மாதிரியாக தமிழில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ய முடிவு எடுத்தது.
இதையடுத்து எந்தெந்த ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்யவேண்டும் என்பது தொடர்பாக அரசு தரப்பில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் நிறைவடைந்து, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உள்ளோம். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து பணியாற்றி வருகிறோம். ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கு, வைப்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்பு வருவாய்த்துறை தான்.
கலெக்டர் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி மாற்றம் செய்வதற்கான பெயர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார்கள். அதன்படி ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 வாரத்தில் பிறப்பிக்கப்படும். அப்போது ‘டிரிப்ளிகேன்’ என்பது திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிக்காரின்’ என்பது தூத்துக்குடியாகவும் உருமாறும். இதேபோல தமிழகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பெயர்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. #MinisterPandiarajan
தமிழகத்தில் சில ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெவ்வேறாக குறிப்பிடப்படுகின்றன. இதனை தமிழில் குறிப்பிடுவது போன்றே மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, வெவ்வேறாக குறிப்பிடப்படும் ஊர்களின் பெயர்களை ஒரே மாதிரியாக தமிழில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ய முடிவு எடுத்தது.
இதையடுத்து எந்தெந்த ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்யவேண்டும் என்பது தொடர்பாக அரசு தரப்பில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் நிறைவடைந்து, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உள்ளோம். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து பணியாற்றி வருகிறோம். ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கு, வைப்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்பு வருவாய்த்துறை தான்.
கலெக்டர் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி மாற்றம் செய்வதற்கான பெயர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார்கள். அதன்படி ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 வாரத்தில் பிறப்பிக்கப்படும். அப்போது ‘டிரிப்ளிகேன்’ என்பது திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிக்காரின்’ என்பது தூத்துக்குடியாகவும் உருமாறும். இதேபோல தமிழகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பெயர்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. #MinisterPandiarajan