search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists visiting"

    • ஏரியின் நடுவே 3 இடங்களில் வைத்திருக்கக்கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    • சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் நடந்தே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தல மாகும். கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்திட முக்கிய பங்கு வகிப்பது இங்குள்ள சுற்றுலா த்தலங்களும், சீதோஷ்ண நிலையும் தான். கொடைக்கானலுக்கென்று தனி அடையாளமாக இருப்பது நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியாகும்.

    தற்போது நட்சத்திர ஏரியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக ஏரியின் நடுவே 3 இடங்களில் வைத்திருக்கக்கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அறிவுறு த்தலின்படி நகராட்சி சார்பில் இந்த செயற்கை நீரூற்று நிறுவப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏரியை ச்சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. செயற்கை நீரூற்றுடன் செல்பி எடுத்தும் படகு சவாரியின் போது செயற்கை நீரூற்று அருகே சென்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி சார்பாக படகு குழாம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படகுகளும் புதிதாக வாங்கப்பட்டு செய ல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் நடந்தே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் படகில் சவாரி செய்யும் இடம் வரை ஏரித்தண்ணீரில் நடை மேடையும் அமைக்கப்பட்டு ள்ளது. கொடைக்கானலில்

    இது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் நட்சத்திர ஏரி புதுப்பொலிவு பெற்று வருகிறது.

    • வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகளை இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியான வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று காலையில் மீண்டும் தங்கும் விடுதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

    இதுபோன்ற செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வனத்துறை சார்பில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு இரவு நேர டிரக்கிங் என்ற பெயரில் சுற்றுலாபயணிகளை வெளியே அனுப்பக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் வனத்துறையினர் இரவில் ரோந்து சென்றபோது கருமலை எஸ்டேட் பகுதி வழியாக வந்த 2 வாகனங்களை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது வன விலங்குகளை காண சுற்றுலாபயணிகளை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரு வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் வாகன டிரைவர்களான ஜீவா (வயது 29), கலையரசன் (32) ஆகியோருக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய அய்யர்பாடி எஸ்டேட்டில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.  

    ×