search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "torch"

    • முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம்.
    • சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஜனநாயகத்தை காப்போம் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவி சித்ரா செல்வி தலைமை வகித்தார்.

    நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன், கொள்ளிடம் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரையாற்றினார்.

    இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரியகுமார், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் காங்கிரஸ் துணைத் தலைவர் செலினா நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோவில் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து வழிபாடு நடத்தினர்.
    • இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆலமரத்தடி காளியம்மன், ராஜ காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுக்கும் விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி காளியம்மனுக்கு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மதுக்குடம், காவடி, தீச்சட்டி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.

    இந்த பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ராமர் மடம், ஆதி திருத்தளிநாதர் ஆலயத்தில் இருந்து நான்குரோடு, பேருந்து நிலையம், செட்டியதெரு, காளியம்மன் கோவில் தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்பு அங்கு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பால்குடத்துடனும், குழந்தைகளை சுமந்தபடியும் தீச்சட்டி ஏந்தியபடியும் அலகு குத்தியபடியும் கோவில் வாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி நேர்த்தி க்கடனை நிறைவேற்றினர்.

    பின்பு அம்மனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பத்தூர் செட்டியதெரு இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்

    ×