என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "took a day off"

    • ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்குதல்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புதல்.

    இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி உடனடியாக வெளியிடுதல்.

    வளர்ச்சி துறையில் வட்டார உதவி பொறியாளர்கள் தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்குதல் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, சென்னிமலை, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, தாளவாடி, கொடு முடி, டி.என்.பாளையம் உள்பட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை மொத்தம் 732 அலுவலர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அலுவலர்களின் விடுப்பு போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு நாள் விடுப்பு போராட்டம் காரணமாக 100 நாள் திட்டம் குடிநீர் பணிகள் அரசு நலத்திட்ட பணிகள் முடங்கியுள்ளது.

    அடுத்த கட்டமாக சென்னையை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு ள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×