search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN congress leaders"

    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது என திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar
    திருச்சி:

    திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள், பிரதிநிதிகள், செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு விட்டது.

    தினகரன் ஒரு பக்கம் தனியாக கட்சி நடத்துகிறார். அவரது மாமா திவாகரன் மன்னார்குடியில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இப்படி அ.தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ள பிளவினால் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


    50 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காமராஜர் போட்ட பலமான அஸ்திவாரம் தான் காரணம். தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆட்சியை காங்கிரஸ் துணை இல்லாமல் வீழ்த்த முடியாது. தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் காமராஜர் தொண்டன் முதல்-அமைச்சர் ஆவார், இது உறுதி.

    நான் ராகுல் காந்தியால் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது. தேசிய அளவில் மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே. அவரது தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #Thirunavukkarasar

    ×