search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TMK"

    • கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது.
    • மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவர் கேசவரெட்டியின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை ஓசூர் வந்தார்.

    பின்னர், அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:

    "பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பு மிகவும் அவசியம் மற்றும் இந்த பகுதி மக்களுக்கு அவசர தேவையாகும். இதனை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். எனவே, இரு மாநில மக்களின் அவசிய, அவசர தேவையை புரிந்து கொண்டு, தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து விரைவில், மெட்ரோ நீட்டிப்புக்கான உறுதியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது சம்பந்தமாக கர்நாடக அரசுடன் கண்டிப்புடன் பேசி, தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிப லிக்கும் அரசாக செயல்பட வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.

    மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன். அதனை நம்புகிறேன். "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை த.மா.கா. வரவேற்கிறது. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், த.மா.காவை பலப்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது கேசவரெட்டி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    ×