search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupur railway station"

    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர்.
    • பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    திருப்பூர்:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை, சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர். வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

    திருப்பூர்:

    இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபாத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.

    இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

    4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அரசின் அக்னிபாத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

    திருப்பூரில் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் கலவரத்தில் யாரும் ஈடுபட முயற்சி செய்துவிட கூடாது என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகளை முழுமையாக சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒவ்வொருவராக உள்ளே செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம் உள்புறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×