search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchengodu"

    முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசு ஒடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
    திருச்செங்கோடு:

    பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவானதையொட்டி கட்சியின் ஒவ்வொரு நிர்வாகியும், சமுதாய தலைவர்கள், பல துறைகளின் முன்னோடிகள், பிரபலமானர்களை சந்தித்து 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை செயல்பாடுகள் குறித்து பேச வேண்டும் என்று தேசிய தலைமையால் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவரும், குழுவின் உறுப்பினருமான காளியண்ண கவுண்டரை சந்திக்க பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் எச்.ராஜா திருச்செங்கோடு வந்தார்.

    அப்போது எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்பட ஊக்கப்படுத்தபடுகிறார்கள்.பொதுவாக மக்கள் போராட்டம் என்றால் அரசு தீர்வு சொன்னவுடன் அடங்கி விடும்.

    ஆனால் இவர்கள் ஊடுருவலால் முடிவுக்கு வர வேண்டிய ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள் பெரிதானது. காவல் துறை தலையிட வேண்டிய நிலை உருவானது.

    நெடுவாசலை பொருத்த வரை உள்ளூர் மக்களும், மாநில அரசும் ஒப்புக் கொள்ளும் வரை திட்டம் அமல்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட நாடு பகுதிகளில் இன்னும் இன்றும் பல இயக்கங்களை சேர்ந்த 30 பேர் போராட்டம் செய்கின்றனர்.

    ஏப்ரல்-1 முதல் ஸ்டெர்லைட் செயல்படாத நிலையில் கலவரம் உண்டாகும் வரை பிரிவினைவாத, பயங்கரவாத நக்சலிச செயல்பாடுகள் அதிகரித்து இருக்கிறது. உளவு துறைக்கு தெரியுமா அல்லது தெரியாதா என தெரியவில்லை.

    தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 8 வழி சாலை சீமான் கொடுத்த அறிக்கை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடியதல்ல. முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசு ஒடுக்க வேண்டும்.


    காவிரி பிரச்சனையில் 50 ஆண்டு கால திராவிட இயக்கங்களில் துரோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேட்ட மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஒரு நன்றி கூட தி.மு.க தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாட்டில் மணல் கொள்ளை என்பது மிகவும் சீரியசான ஒன்று ஆகும். மணல் அடுத்த மாநிலத்துக்கு அனுமதிக்க கூடாது. இறக்குமதி மணல் கிடைப்பதால் மணல் அள்ள விட மாட்டோம் என்று சட்டம் கொண்டும் வர வேண்டும். 18 அடி வரை மணல் அள்ளினால் தண்ணீர் வந்தாலும் பள்ளத்தில் தேங்கி கடைமடை வரை வராது.

    2004-ல் பெட்ரோல் விலை 34 ரூபாய், 10 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 2014ன் படி லிட்டர் 74 ரூபாய் 10 ஆண்டில் 41 ரூபாய் விலை உயர்வு சராசரியாக ஆண்டுக்கு 4 ரூபாய் 4 பைசா உயர்ந்துள்ளது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு 9 ரூபாய் உயர்ந்துள்ளது. சராசரியாக 2 ரூபாய் 10 பைசாதான் உயர்ந்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

    விலை உயர்வு என்பது பொய் பிரசாரம். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. அவ்வாறு வந்தால் டீசல் ரூ.45க்கும், பெட்ரோல் ரூ.55 க்கும் கிடைக்கும் ஆனால் அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறுகிறார்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
    ×