என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchengode Ardhanareeswarar Temple"

    • தேர் நகரின் முக்கிய வீதிகளில் 3 நாட்கள் சுற்றிவந்து நிலை சேர்கிறது.
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 14 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழச்சியாக 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    இந்த தேர் நகரின் முக்கிய வீதிகளில் 3 நாட்கள் சுற்றிவந்து நிலை சேர்கிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர். மேலும் விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி நடந்தது.

    முன்னதாக தேரோட்ட விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேகர்பாபு திருச்செங்கோட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் கூறினார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உடன் இருந்தார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • வெள்ளிக்கிழமை அதிகாலை பரிவார தெய்வங்களுடன் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக 3 நாட்கள் நடக்கும் தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பூக்கடை கார்னரில் நின்ற தேரானது தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக சென்று பழைய பஸ் நிலைய வாயிலில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு வடக்கு ரதவீதி, தெற்கு ரத வீதி வழியாக சென்று தேர் நிலையில் நிறுத்தப்படும். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) மாலை சாமி நெய்க்காரப்பட்டி பவனி செல்லுதலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரிவார தெய்வங்களுடன் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்வும் நடக்கிறது. மேலும் விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    • வைகாசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது.
    • இன்று (வியாழக்கிழமை) வசந்த உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வர் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. 3-வது நாளான நேற்று தேர் வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதியில் சென்று நிலையை அடைந்தது.

    3-வது நாளில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஈரோடு ரமேஷ், நாமக்கல் உதவி ஆணையர் ரமேஷ், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணை தலைவர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் கணேசன், கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணி காந்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனை தொடர்ந்து மாலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை அடைந்தது. கடந்த 4-ந் தேதி தொடங்கிய விழாவில் நேற்று 12-ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்று தேர்நிலையை அடைந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமணி செய்திருந்தார். விழாவில் 13-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) வசந்த உற்சவம் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் பரிவார மூர்த்திகளுடன் கைலாசநாதர் கோவிலில் இருந்து 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலாடி சாமி அதிகாலை திருமலைக்கு எழுந்தருள உள்ளார்.

    ×