என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tiller app"
- பட்டு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
- சந்தை விலை நிலவரம், அணை நீர்மட்டம் உள்ளிட்ட, 23 வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
திருப்பூர்:
விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள், விலை நிலவரம், வானிலை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள உழவன் செயலி பயனுள்ளதாக அமைந்துள்ளது.
உழவன் செயலியில் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு, உரங்கள் இருப்பு நிலை, சந்தை விலை நிலவரம், அணை நீர்மட்டம் உள்ளிட்ட, 23 வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல மாதங்களாக பட்டு வளர்ச்சி துறை சம்பந்தமான தகவல்களை காண முடிவதில்லை.பட்டு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அது சம்பந்தமாக மானியத் திட்டங்கள், விலை நிலவரம் போன்ற தகவல்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.ஆனால் அந்த தகவல்களை உழவன் செயலில் காண முடியாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உழவன் செயலியில் பட்டு வளர்ச்சி துறை தகவல்களை இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மானிய விலையில் சோலார் மின் மோட்டார் வழங்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் கிராமத்தில் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளுக்கான உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக பயிற்சி அளித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் பாலா தலைைம தாங்கினார். விவசாயிகளுக்கு உழவன் ஆப் பற்றி பயிற்சி அளித்து அவர் பேசியதாவது:-
வேளாண் துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை, மாடி தோட்டங்கள், பற்றியும் இயற்கை விவசாயம், விவசாயிகளுக்கு பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளான் எந்திரங்கள், வழங்குவது குறித்தும் மானிய விலையில் சோலார் மின் மோட்டார் வழங்கப்படுகிறது.
குறித்தும் உழவன் ஆப் மூலம் பதிவு செய்து பயனடையலாம் இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் ராகினி, உட்பட வேளாண் துறை, ஆத்மா திட்ட, அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரீடம்பவுண்டேஷன் நிறுவன தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.
இறுதியில் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அதிகாரி. எழிலரசி நன்றி கூறினார். இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் முருகேஷ் தகவல்
- தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டம் மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்களை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உழவன் செயலியை ஆண்ட்ராய்டு செல்போனில் 'ப்ளே ஸ்டோர்' வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் விவசாயிகள் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து கொண்டு உழவன் செயலியை பயன்படுத்தலாம்.
உழவன் செயலியில் 22 வகை பயன்பாடுகளை விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த உழவன் செயலி மூலம் வேளாண் தொடர்பான விவரங்களை விவசாயிகள் வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த தகவல்களுக்கு Youtube-https://www.youtube.com/agridepttn, Facebook-https://www.facebook.com/tnafwd மற்றும் Twitter- https://twitter.com/agridept-tn ஆகிய சமூக ஊடகங்களுடன் இணைந்து வேளாண் தொடர்பான மானிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிந்து பயன் பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்