search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened suicide"

    • ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சிவகாமியின் மகளிடம் அவருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • போலீசார் சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டைபாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி சிவகாமி (வயது 54). இவர் அவரது நிலத்தை மகள் உஷா என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுத்து இருந்தார். இந்தநிலையில் சிவகாமி, வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தனது வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

    மனுவின்படி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சிவகாமியின் மகளிடம் அவருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி அவரது மகள் ஒரிரு மாதங்கள் மட்டும் பணம் கொடுத்தார். தொடர்ந்து பணம் கொடுக்க அவர் மறுத்து விட்டார்.

    பின்னர் சிவகாமி கோவில்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் உஷாவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னால் தொடர்ந்து பணம் தர முடியாது. குத்தகை காலம் முடிந்ததும் நிலத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார்.

    ஆனால் சிவகாமி தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மகளிடம் பணம் வாங்கி கொடுக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் கேட்டு வந்தார். நேற்று மதியம் அவர் விஷ பாட்டிலுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசாரிடம் அவர் மகளிடம் பணம் வாங்கி தரவில்லை என்றால் விஷத்தை குடித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.

    இதனை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த விஷ பாட்டிலை பறித்தனர். பின்னர் போலீசார் சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.போலீஸ் நிலையத்துக்கு விஷத்துடன் வந்து பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×