search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvennainallur girl molested"

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர்பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 28). இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கோபாலின் மனைவி திருவெண்ணைநல்லூரில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் கோபால் திருவெண்ணைநல்லூருக்கு வந்து செல்வார்.

    இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கோபாலின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கோபால் ஆனத்தூருக்கு வந்திருந்தார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கோபால் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல கூடாது என அந்த சிறுமியை கோபால் மிரட்டி சென்றார். இதில் பயந்து போன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை.

    இந்த நிலையில் சிறுமி தனக்கு அடிக்கடி வாந்தி- மயக்கம் ஏற்படுவதாக தனது பெற்றோரிடம் கூறினர். இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி சிறுமி கதறி அழுதார். அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பத்மா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தார்.
    ×