search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruthangal police station"

    ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

    சிவகாசி:

    திருத்தங்கல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தரைத்தளம் மற்றும் முதல்தளம்; என 2 தளங்களை உள்ளடக்கி 249.34 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    காவல் நிலையக் கட்டிடத்தில் 110.41 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளமும் 113.05 சதுர மீட்டர் பரப்பளவில் முதல்தளமும் அமைய உள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலைய கட்டிடத்தின் தரை தளத்தில் வரவேற்பு அறையும், காவல் ஆய்வாளர் அறையும், கணினி அறையும், நிலைய எழுத்தர் அறையும், கைதி அறை (ஆண் மற்றும் பெண்)களும் மற்றும் ஆயுத வைப்பறையும் அமைய உள்ளன.

    முதல்தளத்தில் உதவி ஆய்வாளர் அறையும் ஓய்வு அறை (ஆண் மற்றும் பெண்)யும், பொருள் வைப்பறையும், பதிவேடு அறை மற்றும் விசாரணை அறையும் அமைய உள்ளது.

    இந்த புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நடை பெற்றது. அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன், டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் பொன். சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×