என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருத்தங்கலில் காவல் நிலைய கட்டிடம் - கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பூமிபூஜை நடந்தது
சிவகாசி:
திருத்தங்கல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தரைத்தளம் மற்றும் முதல்தளம்; என 2 தளங்களை உள்ளடக்கி 249.34 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
காவல் நிலையக் கட்டிடத்தில் 110.41 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளமும் 113.05 சதுர மீட்டர் பரப்பளவில் முதல்தளமும் அமைய உள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலைய கட்டிடத்தின் தரை தளத்தில் வரவேற்பு அறையும், காவல் ஆய்வாளர் அறையும், கணினி அறையும், நிலைய எழுத்தர் அறையும், கைதி அறை (ஆண் மற்றும் பெண்)களும் மற்றும் ஆயுத வைப்பறையும் அமைய உள்ளன.
முதல்தளத்தில் உதவி ஆய்வாளர் அறையும் ஓய்வு அறை (ஆண் மற்றும் பெண்)யும், பொருள் வைப்பறையும், பதிவேடு அறை மற்றும் விசாரணை அறையும் அமைய உள்ளது.
இந்த புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நடை பெற்றது. அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன், டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் பொன். சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்