search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The worker who"

    • பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர்.
    • அப்போது சரவணன் முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் ராஜு. இவரது மகன் சரவணன் (வயது 22). இவர் பெருந்துறை, கோவை மெயின் ரோடு, சின்ன மடத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார்.

    பி.காம். பட்டதாரியான இவர் கடந்த 1½ வருடங்க ளாக பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் நிரப்பும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    இதையடுத்து அருகே இருந்த அவரது உறவினர் அருள் மற்றும் சக தொழிலாளிகள் ஜெகன், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சரவணன் அங்கு முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு கார் மூலம் பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சரவ ணனை பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடு த்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் சரவணன் 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் நிரப்பி கொண்டு இருந்தபோது சிலிண்டரின் அடிப்பாகம் கழன்று அழுத்தம் ஏற்பட்டு சிலிண்டர் சரவணனின் நெஞ்சு மற்றும் உடல் பகுதியில் அடித்து அவரை தூக்கி வீசியதும். இதில் படுகாயம் அடைந்து இறந்த தும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×