search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The mysterious man"

    • 1 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த 10 வாழை மரங்கள் வெட்டப்பட்டன.
    • வாழை மரங்களை வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் சத்தி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). விவசாயி.

    இவர் அல்லிகுளம் பகுதியில் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி ராஜேந்திரன் வேலையை முடிந்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர் யாரோ 1 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த 10 வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றனர்.

    மறுநாள் காலையில் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரன் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தர். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    ×