search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the hunt"

    • 5 கிேலா கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் சம்பவத்தில் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம்

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டி கள் கடத்தி வரும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித் துள்ளன. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு படகுகளில் கடத்தி வரப்பட்ட 33 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இலங்கை யில் இருந்து கடல் வழியாக தங்கக்கட்டிகள் படகு மூலம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் மண்டபம் அருகே நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் அதிகாரிகள், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்த மேற்கொண்ட னர். அப்ேபாது அந்த வழியாக பதிவு எண் இல்லாத படகு வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் படகில் இருந்தவர்கள் வேறு பகுதிக்கு திருப்பி வேகமாக சென்றார்கள்.

    உடனே சுதாரித்து கொண்ட கடலோர காவல் படையினர் அவர்களை விரட்டினர். நொச்சியூரணி புதுமடம் கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு அதில் இருந்த 3 பேரும் தப்பினர். அங்கு வந்த அதிகாரிகள் அந்த படகை சோதனை செய்த போது அதில் 5 கிலோ தங்கக்கட்டி கள் இருந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    படகில் பதிவு எண் இல்லாததால் தப்பியோடிய வர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்ைல. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடிக்க மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகி றார்கள். கடத்தல் காரர்கள் சிக்கிய பின்புதான் முழு விவரம் தெரியவரும்.

    ×