search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The End"

    • நாளை சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.
    • 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சையில் உள்ள வீட்டில் சசிகலா தற்போது தங்கியுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவர் தஞ்சையில் இருந்தபடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் அவர் நாளை சேலம் மாவட்ட த்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.

    ஆனால் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து நாளை துக்க நாளாக அனு சரிக்கப்படுகிறது.

    இதனால் நாளை சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நாளை மறுநாள் அதாவது 12-ந் தேதி திங்கள் கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கும், 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×