என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The car was destroyed by fire"

    • ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47).
    • இவரது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட் , 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47). நேற்று அதிகாலை இவரது வீட்டில் வேலை செய்யும் வேல்முருகன் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை பராமரிப்பதற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கார் செட்டில் கார் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை எழுப்பியுள்ளார். அவர் வந்து பார்த்த போது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட், கார் செட், 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து அரிகிருஷ்ணன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கார் தானாக எரிந்ததா அல்லது வேறு யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • காரை அயோத்தி யாப்பட்டணத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 23)என்பவர் ஒட்டினார்.
    • கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து நேற்றிரவு 10 மணியளவில் பட்டர் பிளை மேம்பாலம் வழியாக நெய்க்காரப்பட்டி பகுதியில் ஒரு கார் ஈேராடு நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை அயோத்தி யாப்பட்டணத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 23)என்பவர் ஒட்டினார்.

    அந்த காரில் ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த கார் டிரைவர் காரை சேலத்திற்கு திருப்பினார். அங்கிருந்து 100 அடி தூரம் வருவதற்குள் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த டிரைவர் காரை விட்டு இறங்கி ஓடினார். பின்னர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மின் கசிவு காரணமாக கார் தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    ×