என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thanksgiving Day"
- கடைகள் மட்டுமின்றி இணையதள வழியாகவும் மக்கள் பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்
- வர்த்தகர்கள் அறிவித்த அதிக தள்ளுபடி, அதிக விற்பனைக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்
அமெரிக்காவில், நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என்றும் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) என்றும் கொண்டாடப்படுகிறது.
கருப்பு வெள்ளி என நவம்பரில் அழைக்கப்படும் இந்நாளில் தொடங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடக்கம் வரை அமெரிக்கர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதும். மேலும், வர்த்தகர்கள், தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக பல தள்ளுபடி அறிவிப்புகளையும், ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்ற பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
கடைவழி வர்த்தகத்தை போன்றே இணையதள வழி வர்த்தகமும் மிகவும் மும்முரமாக நடைபெறும்.
இந்நிலையில், அமெரிக்காவில் கருப்பு வெள்ளி அன்று நடைபெற்ற இணையவழி வர்த்தகம், $9.8$ பில்லியன் அளவிற்கு நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிக தள்ளுபடிகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்க அதிகரிக்கும் விருப்பம் ஆகியவையே இதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் மக்களால் முதலில் விரும்பப்படும் பொருட்களாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் அதிக செலவு செய்வதை தவிர்த்து வந்ததால், வர்த்தகர்களிடம் பொருட்கள் தேங்கி கிடந்தது. ஆனால், தற்போது விற்பனை சூடு பிடித்திருப்பதை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொய்வடைந்திருந்த சில்லறை வர்த்தகத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், அடுத்து வரும் நாட்களில் விற்பனையின் அளவு இதே போன்று நீடிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.
- வர்த்தகர்கள் பலவித பரிசு பொருட்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறார்கள்
- பொருட்கள் வாங்கும் வழங்கப்படி ஜோ பைடன் பிரபலமான புத்தகத்தை வாங்கினார்
அமெரிக்காவில் ஒவ்வொரு வருட நவம்பர் மாத 4-வது வியாழக்கிழமை, "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் நாள் என அங்கு கொண்டாடப்படும் இந்நாளில் அமெரிக்காவில் குடும்பங்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, விருந்துண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.
இதற்கு அடுத்த நாள் "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) எனப்படும். கருப்பு வெள்ளிக்கிழமை எனும் பெயரில் கொண்டாடப்படும் இந்நாள், டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பொருட்கள் வாங்க தொடங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கடைகளில் பல்வேறு பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வர்த்தகர்கள் அதிக தள்ளுபடி வழங்குவதும், பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஷாம்பெயின் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை அளிப்பதும் வழக்கம்.
இந்த வியாபார கொண்டாட்டம் ஆண்டு இறுதி வரை நடந்து, பின் புது வருட கொண்டாட்டங்களுக்கு பிறகு நிறைவடையும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில தீவான நான்டுகெட் (Nantucket) பகுதியில், தன் குடும்பத்தினருடன் கோடீசுவரர் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான பெரிய வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார்.
கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் (Heather Cox Richardson) எனும் பெண் வரலாற்று ஆசிரியர் எழுதிய "ஜனநாயகத்தின் விழிப்பு" எனும் பொருள்படும் "டெமாக்ரஸி அவேகனிங்" (Democracy Awakening) புத்தகத்தை வாங்கினார்.
"எங்கள் குடும்ப வழக்கம் இது. கருப்பு தின கொண்டாட்டத்தின் போது ஒரு புத்தக கடைக்காவது சென்று புத்தகம் வாங்குவது எங்கள் குடும்ப வழக்கம்" என இது குறித்து பைடன் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜோ பைடனை ஹீதர் பேட்டி கண்டதும், அதில் அவரை, "அமெரிக்க ஜனநாயகம் எனும் பண்டைய சித்தாந்தத்தை மீட்டு எடுக்கும் புரட்சிகரமான அமெரிக்க அதிபர்" என புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடனுடன் வந்திருந்த அவர் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன், தங்கள் குடும்பம் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்