search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalaiyari"

    • ஆறுமுக பாண்டி தலையாரியாக வேலை பார்த்து வந்தார்.
    • மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஆறுமுகபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி (வயது 58). இவர் அதே கிராமத்தில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆறுமுகபாண்டி பணி நிமித்தமாக கூவாச்சிபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஆறுமுகபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஆறுமுகபாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×