search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "textiles store owner suicide"

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளிக் கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னமுத்து, 3-வது வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுகுணா தேவி.

    பாலமுருகன் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஜவுளி தொழிலில் பாலமுருகனுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாலமுருகன் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாலமுருகன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வந்து உள்ளார். பின்னர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வி‌ஷத்தை குடித்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×