search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrible fire at"

    • டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் அருகே யுள்ள சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் புஞ்சை துறைய ம்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகே மாரியப்பன் (49) என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    வேலை முடிந்ததும் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மாரியப்பன் டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து மாரியப்பன் மற்றும் அவரது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி வெளியேற்றினர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு துறையினரு க்கு தகவல் கொடுக்கப்ப ட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் மாரியப்பனின் டீ கடை மற்றும் வீட்டின் மேற்கூரை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் 2 சிலிண்டர்களை மீட்டனர். மேலும் டீ கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சில பாத்திரங்கள் சேதமடைந்தன.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவு டீ கடையில் வேலை முடிந்து செல்லும் போது விறகு கட்டையில் இருந்த தீயை சரி வர அணைக்காமல் கவனக்குறைவாக இருந்து தூங்க சென்றுள்ளதாக தெரியவந்தது.

    இதனால் காற்றின் வேகத்தில் தீ உருவாகி படிப்படியாக விறகில் பற்றிய தீ டீ கடை முழுவதும் பற்றி எரிந்து இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×