search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager commits suicide by"

    • கார்த்தி கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சில்லி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கார்த்தி அவரது அண்ணன் கணேசனுடன் சத்தியமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். கார்த்திக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடும் வயிற்று வலியின் காரணமாக கார்த்தி கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது அண்ணன் கணேசன் கார்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அருண்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் செண்பதம் புதூர், தோனிகோலை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பெருமக்கா. இவர்களுக்கு அம்சவேணி என்ற மகளும், அருண்பிரகாஷ் (23) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அருண்பிரகாசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அவர் கடந்த 2 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.

    அப்போது அருகே குடியிருக்கும் திருமணமான பெண் ஒருவருடன் அருண்பிரகாசுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 2 பேரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அருண்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழிலேயே அருண் பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அருண்பிரகாஷ் பெற்றோ ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மகன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது பெற்றோர் அரச்ச லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகன் சார்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு இளம்பெண் மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பரபரப்பு புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×