என் மலர்
நீங்கள் தேடியது "Teachers union meeting"
- 9 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர்
- பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
வாலாஜா:
ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு நேற்று வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.வி.எத்துராஜ் தலைமை தாங்கினார். முனைவர் கலைநேசன் வரவேற்றார். அறிக்கையை குறித்து மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் 75 அகவை முடிந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல் அகவிலைப்படி உடனடியாக வழங்க்கோரியும், 70 வயதானவர்க்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கேட்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்தக் கோருதல், மருத்துவப்படி ரூ.1000 உயர்த்தக்கோருதல், மூத்த குடிமக்களுக்கு ெரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ள ஓய்வூதிய அறிக்கையை உடனே அமுல்படுத்த வேண்டும், கம்யூடேசன் பிடித்தம் தொகையை 12 ஆண்டுகளாக குறைத்தல் பற்றி வலியுறுத்தி 9அம்ச கோரிக்கைகளை குறித்து பேசினர்.
வரதன், சுந்தரேசன், கோவிந்தசாமி, ஜெயக்குமார், தேவநேசன், மோகன், கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். மேலும் இயற்கை மருத்துவத்தைப் பற்றி ஆரோக்கியத்தின் சாவி என்ற தலைப்பில் அரசு மருத்துவர் எஸ்.சசிரேகா ஆலோசனை வழங்கினார்.
மாநில இணை செயலாளர் நிலவு குப்புசாமி நன்றி கூறினார்.
- ராமசாணிக்குப்பம் பள்ளியில் நடந்தது
- பள்ளிவளர்ச்சி குறித்து ஆலோசனை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்திறன், பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பல ஆலோசனைகள் நடைபெற்றது. முடிவில் இதற்கு முன்பு பள்ளி வளர்ச்சிக்காகவும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் ஆர்.வி.விஜயகுமார் (மின்சாரத் துறை ஓய்வு) என்பவர் பள்ளிக்காக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ்.50 ஆயிரம், 2 வகுப்பறைகள் டைல்ஸ் கற்கள் பதிக்க ரூபாய் 30 ஆயிரம், பள்ளி புரவலர் திட்டத்திற்கு ரூ.26ஆயிரம் பள்ளி நலனுக்காக அவர் மொத்தம் 1,06,000 ரூபாய் தந்திருக்கிறார்.
இவரை ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி பார்த்தீபன், பள்ளி தலைமை ஆசிரியர்தா மரைச்செல்வி, ஓய்வு ராணுவ வீரர் க.பிரபாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வாசுகி, கல்வியாளர் ஜெயராமன், வார்டு உறுப்பினர்.பாலசுந்தரம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பிடிஎ ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து பாராட்டினர்.மேலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமும் நடைபெற்றது.






