என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
    X

    பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்த காட்சி.

    பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

    • ராமசாணிக்குப்பம் பள்ளியில் நடந்தது
    • பள்ளிவளர்ச்சி குறித்து ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்திறன், பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பல ஆலோசனைகள் நடைபெற்றது. முடிவில் இதற்கு முன்பு பள்ளி வளர்ச்சிக்காகவும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் ஆர்.வி.விஜயகுமார் (மின்சாரத் துறை ஓய்வு) என்பவர் பள்ளிக்காக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ்.50 ஆயிரம், 2 வகுப்பறைகள் டைல்ஸ் கற்கள் பதிக்க ரூபாய் 30 ஆயிரம், பள்ளி புரவலர் திட்டத்திற்கு ரூ.26ஆயிரம் பள்ளி நலனுக்காக அவர் மொத்தம் 1,06,000 ரூபாய் தந்திருக்கிறார்.

    இவரை ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி பார்த்தீபன், பள்ளி தலைமை ஆசிரியர்தா மரைச்செல்வி, ஓய்வு ராணுவ வீரர் க.பிரபாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வாசுகி, கல்வியாளர் ஜெயராமன், வார்டு உறுப்பினர்.பாலசுந்தரம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பிடிஎ ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து பாராட்டினர்.மேலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமும் நடைபெற்றது.

    Next Story
    ×