search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher meeting"

    இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய விகிதம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு குமலன்குட்டை தொடக்க பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் ப.சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலாளர் மார்க்ரெட் சில்லியா கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய விகிதம் (7-வது ஊதியக்குழு) அளிக்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை முறைபடுத்த வேண்டும்.

    ஓய்வூதியம் செய்ய ஏற்படுத்திய குழுவின் காலத்தை நீடிக்காமல் உடனடியாக அறிக்கை பெற்று உரிய முறைப்படுத்தி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    செங்குந்தபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பெற்றோர்கள் ஆசிரியர் கழகத் தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் அசோகன் சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் வேலுமணி தீர்மானங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

    முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் புதிய தலைவராக கீதா தேர்ந்தெடுக்கபட்டார். கூட்டத்தில் ஆசிரியர்கள், ஏராளமான பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து பள்ளிகளுக்கும் நல்ல தரமான ஆண்ட்ராய்டு போன் வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கரூர்:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தரகம்பட்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஜான்சன் வரவேற்றார்.

    முன்னாள் மாவட்ட துணை தலைவர் பிச்சை ஆரோக்கியம், பொருளாளர் கனகராஜ், சகிலா மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், இடைநிலை ஆசிரியர் கவுன்சிலிங்கில் அனைத்து மாவட்ட காலப்பணியிடங்களையும் காண்பித்து நடத்தாமல் விட்டதை கண்டிப்பது,

    தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் கியூ.ஆர் எனப்படும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியுள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் நல்ல தரமான ஆண்ட்ராய்டு போன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    ×