search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher examination"

    • தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான(டிஆர்பி., டிஇடி) இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய 2023 ம் ஆண்டுத் திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3587 காலிப்பணியிடங்களுக்கும் (டிஆர்பி., டிஇடி) தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    ஆசிரியர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்குகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் 2-ம் நிலை காவலர் தேர்வுகளுக்கான பியிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முற்பகல் முதல் தொடங்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது.

    2-ம் நிலை காவலர் தேர்விற்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியின்போது இலவசமாக பயிற்சிக் குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் 2-ம் நிலை காவலர் தேர்வு ஆகிய 2 தேர்வுகளுக்கும் ஒவ்வொரு வார புதன்கிழமைகளில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். 

    மேற்கண்ட தகவல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
    ×