search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    கோப்புபடம்

    ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி

    • தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான(டிஆர்பி., டிஇடி) இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய 2023 ம் ஆண்டுத் திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3587 காலிப்பணியிடங்களுக்கும் (டிஆர்பி., டிஇடி) தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×