search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamizhaga Makkal Munnetra Kazhagam"

    • போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர்.
    • ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 65) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் இவர் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அப்போது 2 கார்களில் 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்து கூச்சலிட்டு உள்ளனர்.

    வெளியே வராத ஞானசேகர், வீட்டின் உள்ளே இருந்து யார் என கேட்டுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஜே.பி.சண்முகம் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார் என தெரிவித்தனர்.

    அப்படி யாரையும் எனக்கு தெரியாது என கூறி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    உடனடியாக ஞானசேகர் முசிறி போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். போலீஸ் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது தகராறில் ஈடுபட்டது முசிறி அருகே, வெள்ளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் மெக்கானிக் செந்தில் (40) , ஜவேலி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஜே.பி.சண்முகம் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சண்முகம் மாவட்ட செயலாளர் ஆகவும், செந்தில் ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×