என் மலர்
நீங்கள் தேடியது "Tamilkudal program"
- திருச்சுழி நூலகத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
- சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 'கலைத் திருவிழா' நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக 'தமிழ்க்கூடல்' என்னும் நிகழ்ச்சி திருச்சுழி நூலகத்தில் நடைபெற்றது. சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.அறந்தாங்கி அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார் சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'தமிழரின் வரலாறும் பண்பாடும்' பற்றி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் பொறுப்பாளர் செல்வலட்சுமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சேதுபதி அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளியின் பட்டதாரி ஆசிரியை தேவி நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர் மற்றும் ஆசிரியர் களுக்கு நூலகர் பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார். வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர், அழகேசன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் நூலக பணியாளர் பாண்டிதேவி, வாசகர் வட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ், வீரராஜன், விக்னேஷ் மற்றும் மாணவ,மாணவிகள் ஆசிரியைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






