என் மலர்
நீங்கள் தேடியது "சான்றிதழ்"
- பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
- மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 - 24 ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மலா்விழி கூறியதாவது:-
இக்கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
நாளை காலை 9 மணிக்கு பி.எஸ்.ஸி. கணினி அறிவி யல், பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 3 ஆம் தேதி 9 மணிக்கு பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதேபோல, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இக்கலந்தாய்வுக்கு மாணவிகள் குறித்த நேரத்தில் கட்டாயம் வர வேண்டும். வரும் போது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்களை மாணவிகள் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆய்வுகள் பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் தஞ்சை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.இதையடுத்து கலெக்டர் முன்னிலையில் மாணவர்கள் தாங்கள் செய்த ஆய்வுகளை விளக்கிப் பேசி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கூறினர். தங்கள் ஆய்வுகளை பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ஹேமலதா துவக்கவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் ராஜசேகர் , பேராசிரியர் மாரியப்பன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணை ப்பாளர் முனைவர் ராம்மனோகர் ஆகியோர் ஆய்வுகளை மதிப்பீடு செய்வது தொடர்பாக பயிற்சியளித்தனர்.
இதில் 50 -க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவியர்கள் 600 தலைப்புகளில் ஆய்வுகட்டுரை சமர்பித்தனர்.
இதிலிருந்து சிறந்த 60 ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற 4-ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுகுமாரன், ஆய்வின் நோக்கம் பற்றி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கௌரவத் தலைவர் கார்த்திகேயன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச்செயலர் ஸ்டீபன்நாதன் வாழ்த்துரை வழங்கினார்.
மண்டல மாநாட்டில் பங்கேற்க உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு மாவட்டக்கருவூல அலுவலர் கணேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநாட்டில் பங்கேற்ற பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டன.
தஞ்சை மாவட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தியாகராஜன், செந்தில்குமார், பட்டுக்கோட்டை கிளைசெயலர் செந்தமிழ் செல்வி, மாத்தூர் கிளை சுகந்தி, மாத்தூர் கிழக்கு ஊராட்சிமன்ற தலைவரும் அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைச்செயலருமாகிய மஞ்சுளா, அரியலூர் மாவட்டச்செயலர் ஞானசேகர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
விலங்கியல் துறைத்தலைவர் சந்திரகலா, தமிழ்த்துறையை சார்ந்த பேராசிரியர் தமிழடியான் மற்றும் கல்லூரியின் அனைத்து துறையை சார்ந்த பேராசிரியர்களும் நடுவர்களாக பணியாற்றி மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்தனர்.
நிகழ்ச்சியை கல்லூரி மாணவி பார்வதி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி முடிவில் மாவட்டத்துணைத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.






