என் மலர்
நீங்கள் தேடியது "CBCID"
- விசாரணையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளையும் டி.ஜி.பி. அனுமதி பெற்று விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம்
சென்னை:
தமிழக காவல் துறையில் கூறப்படும் புகார்கள் தொடர்பாக இனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரிபவர்கள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.
இதுபோன்ற புகார்களை கீழ்மட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசார், காவலர் கள் உள்ளிட்டோர் அளிப்ப துண்டு. சில நேரங்களில் இந்த புகார் மனுக்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விடுவதும் உண்டு. இதனை கருத்தில் கொண்டு காவல்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி துறை ரீதியான புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளையும் டி.ஜி.பி. அனுமதி பெற்று விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனி காவல் துறையில் எழும் துறை ரீதியான புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரே விசாரணை நடத்துவார்கள். இதனால் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- பூசாரி விக்னேஷ் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
- தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் பலருக்கும் சம்மன் அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் மற்றும் சென்னை போயஸ் கார்டனில் பல வருடங்களாக பூசாரியாக பணியாற்றி வந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் புதுச்சேரியை தனியார் வங்கிக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி கோத்தகிரியை சேர்ந்த பூசாரி விக்னேஷ் இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? எவ்வளவு நாட்களாக அங்கு வேலை பார்க்கிறீர்கள்.
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.
இதேபோல் தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி கேட்டு விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே அவர்களிடம் எது தொடர்பாக விசாரித்தனர் என்ற தகவல் தெரியவரும்.
ஒரே நாளில் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.






