என் மலர்
நீங்கள் தேடியது "Agricultural department"
- வண்டல் மண்ணை வயலில் இடுவதால், வயல் மண்ணின் பௌதீக மற்றும் ரசாயண தன்மை மாறுகிறது.
- நுண்ணூட்ட சத்துக்களின் அளவு அதிகரிப்பதால் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
அம்பை:
அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"ஆற்று வண்டல் தேற்றும் பயிரை" என்பது தமிழ் முதுமொழி. ஆற்று வண்டல் மண்ணை வயலில் இடுவதால் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிரின் மகசூல் அதிகரிக்கும் என்பது இதன் பொருள்.
வண்டல் மண்ணை வயலில் இடுவதால், வயல் மண்ணின் பௌதீக மற்றும் ரசாயண தன்மை மாறுகிறது. வண்டல் மற்றும் களி அளவு (வயல் மண்ணில்) அதிகரி க்கிறது. இதனால் வயல் மண்ணில் தண்ணீர் தக்க வைக்கும் திறன் அதிகரி க்கிறது. மண்ணின் அமில காரத் தன்மை மேம்படுத்த ப்படுகிறது. மண்ணில் கரிம அளவு அதிகரிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் கந்தக சத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவில் இச்சத்துக்கள் பயிருக்கு கிடைக்க செய்கிறது. மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவும் அதிகரிக்கிறது. மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது.அம்பை வட்டாரத்தில் பொதுப்பணிதுறை குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு கண்டறிய ப்பட்ட குளங்களாவன:
கோடாரங்குளத்தில் இடைமலைக்குளம், மேல அம்பாசமுத்திரத்தில் மேல இடையன்குளம், கீழ இடையன்குளம், ரெங்கை யன் குளம், பல்லாங்குளம், ஏகாம்பர புரத்தில் பெட்டை குளம், உசிலம் குண்டு குளம், திருநாண் குளம், அடைய கருங்குளம் கல்சூந்துகுளம், குமார தீர்த்துகுளம், வாகை குளம் கிராமத்தில் சிறுங்க ன்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த சுமை தாங்கி குளம், சீர்மாதங்குளம், வைராவிகுளம் கிராமத்தில் வைராவிகுளம், கீழ்முகத்தில் குறிப்பான்குளம், அயன்சி ங்கம்பட்டி கிராமத்தில் சிங்கம்பட்டி தெற்குகுளம், சிங்கம்பட்டி வடக்குகுளம், தெற்கு பாப்பான்குளத்தை சார்ந்த கரடிகுளம், உப்பு கரைகுளம், ஆலடிகுளம், அய்யப்ப சேரிகுளம், ஆத்தியா ன்குளம்.மேற்காணும் குளங்களில் வண்டல்மண் எடுத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே இக்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் வண்டல்மண் எடுக்க உடனடியாக தங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு மனு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே விவ சாயிகள் தங்கள் வயல் நிலங்களில் வண்டல் மண் இட்டு மண் வளத்தை பெருக்கி அதிக மகசூல் எடுத்திடலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துங்காவி ஊராட்சி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, வேளாண் வணிகம், விற்பனை துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆவின் மற்றும் மீன் வளர்ச்சி துறை, சுகாதாரத் துறை, கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை சார்ந்த திட்டங்கள் இந்த கிராமத்தில் நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா தமிழக முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. துங்காவியில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்மைத்துறை சார்பாக ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பவர் ஸ்பிரேயர், உளுந்து விதை மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இயற்கை இடுபொருட்கள், வரப்பு ஓரங்களில் நடவு செய்ய பழமரக்கன்றுகள் மற்றும் இதர மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பண்ணை குறைபாடுகள் அகற்றுதல் திட்டத்தின்கீழ் அறுவடை பெட்டி மற்றும் பிளாஸ்டிக்தொட்டி ரூ.40ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது.
துங்காவி கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ரூ.1½ லட்சம் கடன் தொகையும் 14 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டையும், உதவிகளும் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 6½ லட்சம் மதிப்பிலான பணி ஆணையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் காவியா, துணைத்தலைவர் ஈஸ்வரசாமி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரோனால்டோ செல்டன் பெர்னாண்டஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






